நாட்டு நடப்பு
Posted by
frozali
at
2:12:00 am
உலகமயம் என்ற பெயரில்
உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு போட்டனர் பூட்டு
தாராளமயம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கைக்கு வைத்தனர் வேட்டு
புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதிய சிக்கல்களை உருவாக்கி விட்டனர்
விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டு
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தனர்
விளை நிலங்களை எல்லாம் கோடிகளைப் பெற்று
வந்தாருக்கு தாரை வார்த்து மகிழ்ந்தனர்
பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு
பகல் கொள்ளையடிக்க வசதி செய்தனர்
நதிநீரை உறிஞ்சி எடுத்து விவசாயி வயிற்றிலடித்து
நமக்கு பாட்டிலில் தந்து பணம் குவித்தனர்
அநீதிகளைக் கண்டால் தட்டிக் கேட்க
ஆக்ரோசமாகப் பால் போல பொங்கிடு
சின்ன மீனைப் போட்டு சுறாமீனைப் பிடிக்கும்
வாக்களிக்க வழங்கும் இலஞ்சத்தை வாங்காதே
மணல் கொள்ளையடித்து மறுபடியும் ஒரு
சுனாமிக்கு வழிவகுக்கும் கொடுமையைத் தடுத்திடு
இயற்கையை மாசு படுத்தும் சிலரின்
இழி செயலை உடன் தடுத்து நிறுத்திடு
உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு போட்டனர் பூட்டு
தாராளமயம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கைக்கு வைத்தனர் வேட்டு
புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதிய சிக்கல்களை உருவாக்கி விட்டனர்
விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டு
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தனர்
விளை நிலங்களை எல்லாம் கோடிகளைப் பெற்று
வந்தாருக்கு தாரை வார்த்து மகிழ்ந்தனர்
பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு
பகல் கொள்ளையடிக்க வசதி செய்தனர்
நதிநீரை உறிஞ்சி எடுத்து விவசாயி வயிற்றிலடித்து
நமக்கு பாட்டிலில் தந்து பணம் குவித்தனர்
அநீதிகளைக் கண்டால் தட்டிக் கேட்க
ஆக்ரோசமாகப் பால் போல பொங்கிடு
சின்ன மீனைப் போட்டு சுறாமீனைப் பிடிக்கும்
வாக்களிக்க வழங்கும் இலஞ்சத்தை வாங்காதே
மணல் கொள்ளையடித்து மறுபடியும் ஒரு
சுனாமிக்கு வழிவகுக்கும் கொடுமையைத் தடுத்திடு
இயற்கையை மாசு படுத்தும் சிலரின்
இழி செயலை உடன் தடுத்து நிறுத்திடு
0 comments:
Post a Comment