WELCOME TO MURARBADU

ANY WHRE ANY TIME CONTACT MURARBADU.BLOGSPOT.COM +917373118517 +918144684433

  • Events
  • Artists
  • About us
  • Gallery
    • Gallery 1 col
    • Gallery 2 cols
    • Gallery 3 cols
  • Our blog
  • Contact

அஸ்ஸலாமு அலைக்கும்

Posted by frozali at 11:18:00 am

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.

0 comments:

Post a Comment

Tntj live tv app for android mobile

Posted by frozali at 1:07:00 am
https://play.google.com/store/apps/details?id=com.tntj.tntjwebtv

0 comments:

Post a Comment

Islam

Posted by frozali at 12:57:00 am

####    40 Hadeeth    ####

💠 اِنّما الاَعْمَالُ بِالنّیَّات
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக்கொண்டே கூலி வழங்கப்படும்.

💠 اَلصّلٰوة نُورُ المُومِنِ
தொழுகை விசுவாசியின் ஒளி.

💠 اَلصّیَامُ جُنّةٌ
நோன்பு பாதுகாகககும் கேடயமாகும்.

💠 اِنّ الدِّینَ یُسْر
நிச்சயமாக (இஸ்லாமிய)மார்க்கம் இலேசானதாகும்.

💠 اَلدِّینُ النَّصِيحَةُ
(இஸ்லாமிய) மார்க்கம் ஓர் உபதேசமாகும்.

💠 اَلعَینُ حَقٌّ
கண் திருஷ்ட்டி உண்மையாகும்.

💠 طَلَبُ العِلمِ فَرِيضَةٌ علیٰ کُلِّ مُسلِمٍ
கல்வியை கற்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை.

💠 خَیرُ الحَدِیثِ کِتَابُ اللّٰہِ
பேச்சில் சிறந்தது குர்ஆன் ஆகும்.

💠 وَ خَیرُ الھَدیِ ھَدیُ مُحَّمدٍ صلی اللّٰہ علیہ وسلم
வழிகளில் சிறந்தது நபி வழியாகும்.

💠 اَلحَیَاءُ مِنَ الاِیمانِ
வெட்க்கம் ஈமானில் ஒரு பகுதி.
💠 اَلعَجلَةُ مِنَ الشَّيطَان
      جلد بازی شیطان کا کام ھے
அவசரம் ஷைத்தானின் குணம்.

💠 اَلبِرُّ حُسنُ الخُلقِ
நண்மை என்பது நற்குணத்தின் மறு பெயர்

💠 اَلطّھور شَطرُ الاِیمَانِ
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.

💠 مَن صَمَتَ نَجَا
மௌனம் காத்தவன் வெற்றி பெறுவான்.

💠 لا تَسُبُّوا الاموَات
இறந்தவர்களை ஏசாதீர்கள்.

💠 لاَ تَسئَلُونَ النَّاسَ شَیئاً
மனிதர்களிடம் யாசிக்காதீர்கள்.

💠 سَمِّ اللّٰہ وَ کُل بِیَمِینِک
பிஸ்மில்லாஹ் கூறி வலது கையினால் சாப்பிடு!

💠 کُل مِمَّا یَلِیک
பாத்திரத்தில் உனக்கு நெருக்கத்தில் உள்ள உணவை சாப்பிடு!

💠 لاَ یَشرِبَنَّ اَحَدٌ مِنکُم قَائِماً
நின்று கொண்டு நீர் அருந்தாதே!

💠 اَلسِّوَاکُ مَطهَرةٌ لِلفَم وِ مَرضَاةٌ لِلرّبِّ
பல் தேய்ப்பது வாயை சுத்தப்படுத்தும், வல்ல அல்லாஹ்வை திருப்தி படுத்தும்.

💠 اَلسَّلامُ قَبلَ الکَلام
பேசுவதற்கு ஸலாம் கூற வேண்டும்.

💠 اَفشُوا السَلامَ بَینَکُم
உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்!

💠 كُلُّ مَعرُوفٍ صَدقَة
ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகும்.

💠 اِنَّ اللّٰہ رَفِیقٌ یُحِبُّ الرَّفِق
அல்லாஹ் மென்மையானவன்,மென்மையான அனுகுமுறையையே அவன் விரும்புகிறான்.

💠 لا تُقبَلُ صَلوٰةٌ بِغَيرِطهُور
தூய்மையின்றி தொழுகை இல்லை.

💠 اَحَبُّ البِلادِ اِلیٰ اللّٰہ مَسَاجِدُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு உகப்பான இடம் பள்ளிவாசல்களாகும்.

💠 اَبغَضُ البِلادِ اِلی اللّٰہ اَسوَاقُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் கடைத்தெருக்களாகும்.

💠 تُحفَةُ المُومِنِ المَوت
மரணம் முஃமினுக்கு அருளாகும்.

💠 اَنزَلُوا النَّاسَ مَنَازِلَھُم
மனிதர்களுக்கு அவரவர்களின் அந்தஸ்துகளை கொடுங்கள்!

💠 لا یَرحَم اللّٰہُ مَن لا یَرحَم النَّاس
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

💠 لا يَدخُلُ الجَنَّة قاطِعٌ
உறவை துண்டித்தவன் சுவனம் போக மாட்டான்.

💠 لا یَحِلُّ لِمُسلِمٍ اَن یُرَوِّعَ مُسلِماُ
எந்த முஸ்லிமையும் மிரட்டக்கூடாது.

💠 لا تَحقِرَنَّ شَیئاً مِّنَ المَعرُوف
எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ணக்கூடாது.

💠 بَلِّغُوا عَنِّی
என் மூலம் ஒரு உபதேசம் கிடைத்தாலும் அதனை பிறருக்கு கூறிவிடுங்கள்!

💠  لا اِیمَانَ لِمَن لا اَمَانَةَ لَه
அமானிதம் காக்கும் தன்மை இல்லையெனில் அவனிடம் ஈமான் இல்லை(என அர்த்தம்).

💠 وَلا دِینَ لِمَن لا عَھدَ لَہ
வாக்கு மீறல் இருந்தால் மார்க்கமே இல்லை.

💠 اَلتّائِبُ مِنَ الذّنبِ کَمَن لا ذنبَ لَہ
பாவங்களை விட்டும்(மீண்டு) தவ்பா செய்தவன் பாவங்களே இல்லாதவனைப் போல,(பரிசுத்தமாகி விடுவான்).

💠 مَن لَم یَشکُرِ النَّاسَ لَم یَشکُر اللّٰہ
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.

💠 زیِّنُوا القُرآنَ بِاَصوَاتِکُم
உங்கள் குரல்கள் மூலம் குர்ஆனை அலங்காரப் படுத்துங்கள்!.

💠 خَیرُکُم مَن تَعَلَّمَ القُرآن و عَلَّمَہ
உங்களில் மிகச்சிறந்தவர் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்தான்.

*(சின்ன சின்ன நபி மொழிகள் இவை,இவற்றை நாமும் மனனம் செய்வதோடு நம் பிள்ளைகளையும் மனனம் செய்ய வைக்கலாம்)
இதனை மற்றவர்களுக்கும் பகிருஙங்க்!
*அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!*

0 comments:

Post a Comment

Islam

Posted by frozali at 12:56:00 am

மயிலாடுதுறைக்கு அருகே மன்னன்பந்தலில் உள்ள A.V.C கல்லூரியில் இந்த ஆண்டுமுதல் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிவதை தடை செய்திருக்கிறார்கள். கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் புர்கா அணியமாட்டோம் என்று எழுதிவாங்கிறார்கள். பழைய மாணவிகளிடமும் புர்கா அணியகூடாது மீறினால் கல்லூரியிலிருந்து நீக்கபடுவீர்கள் என்று மிரட்டபடுகிறார்கள். நமது சமுதாய முன்னவர்களும் இயக்க செயல்வீரர்களும் இதை தீர விசாரித்து மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக இருக்க உறுதி செய்வோம்...

A.V.C கல்லூரியில் பெண்கள் புர்க்கா போடுவதற்கு தடை விதித்தது சம்மந்தமான பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க  இன்ஷா அல்லாஹ் 23.06.15 இன்று மதியம் டி.என்.டி.ஜெ நாகை வடக்கு மாவட்ட நிர்வாகம் கல்லூரி முதல்வரை சந்திக்க உள்ளது.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாகை வடக்கு மாவட்டம்.

0 comments:

Post a Comment

Islam

Posted by frozali at 12:54:00 am


உலகமே அதிர்ச்சியில் )
கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )
==================================
மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.
செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).
இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.
கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .
மேலதிக ஆராய்ச்சிகளின் பயனாக இந்த பகுதிக்கு மிக அண்மையில் இருக்கும் ஜபல் எல் லவுஸ் என்ற (தூர்சீனா) மலையடிவாரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மூஸா (அலை) அவர்களால் கல் பிளக்கப்பட்டு தண்ணீர் வந்த கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலையடிவாரம் ஒருசில காரணங்களுக்காக தற்போது சவூதி அரசினால் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.( இணைக்கப்பட்ட படங்களில் அவற்றை காணலாம்)

0 comments:

Post a Comment

Newer Posts Home Older Posts
Subscribe to: Posts (Atom)

Categories

  • A MOVIE
  • dr
  • health
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS
  • ISLAM
  • KAVITHAI
  • new tamil mp3
  • puplic
  • tech
  • இந்தியன் lovers
  • இஸ்லாம்
  • நித்யா

Photostream

bjghtotfnbovtytvobuiygrcvbhijpiutgbgu
M.FROZALI MURARBADU +917373118517

My site is worth$967.28Your website value?

ANY WHERE ANY TIME CONNECTING PEOPLE
frozali. Powered by Blogger.
very cheap calling card india mobile 1200 min land line 1000 min just 75 saudi riyal only contact: +966533693467

Followers

Blog Archive

  • May (2)
  • Jul (7)
  • Mar (48)
  • May (1)
  • Jun (3)
  • Jun (1)
  • Jun (5)
  • Jul (1)
  • Dec (1)
  • Apr (1)

Hello there!

Follow us

Bookmark and Share

Tags

  • A MOVIE (12)
  • dr (1)
  • health (5)
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS (1)
  • ISLAM (9)
  • KAVITHAI (4)
  • new tamil mp3 (2)
  • puplic (1)
  • tech (4)
  • இந்தியன் lovers (1)
  • இஸ்லாம் (1)
  • நித்யா (1)
Copyright © 2013 WELCOME TO MURARBADU - Btemplate by SoraTemplates - and Free Blogger Templates.

Back to top