WELCOME TO MURARBADU

ANY WHRE ANY TIME CONTACT MURARBADU.BLOGSPOT.COM +917373118517 +918144684433

  • Events
  • Artists
  • About us
  • Gallery
    • Gallery 1 col
    • Gallery 2 cols
    • Gallery 3 cols
  • Our blog
  • Contact

''எத்தனை நாளைக்குத்தான் இந்த வாடக வீடு அதனால் சொந்தவீடு" காசு விஷயத்தில் கனவைவிட கணக்குதான் முக்கியம்.

Posted by frozali at 9:37:00 pm
வாசல்ல ஏங்க இப்படி குப்பையை போட்டு வச்சிருக்கீங்க... குடியிருக்கிற வீடு கொஞ்சம் சுத்தமா இருக்க வேண்டாமா? உங்களால முடியலைன்னா முறவாசலுக்கு முப்பது ரூபா சேர்த்து குடுத்துருங்க... நானே ஆள்வச்சு செஞ்சுக்கிறேன்! வாடகை வாங்க வந்த வீட்டுக்காரர் பவ்யமாதான் சொல்லிவிட்டுப் போனார்...

ஆனால் பாக்யலட்சுமிக்கு என்னவோ தன் சுயமரியாதைக்கு வீட்டுக்காரர் சூடு போட்டுவிட்டமாதிரி ஒரு ஃபீலிங்... வீட்டுக்காரர் பேசும்போது பக்கத்து வீட்டுக்காரங்க வேற பார்த்துட்டாங்க, அதான்!

வேலைக்குப் போய்ட்டு வந்த கணவர் பேண்ட்டுலர்ந்து கைலிக்கு மாறுவதற்குள் கையில் காப்பியை கொடுத்தவள், சொந்த வீட்டின் சுகத்தையும், கௌரவத்தையும் கொஞ்சம் இதமா எடுத்து வைத்தாள்...

''எத்தனை நாளைக்குத்தான் இந்த வாடக வீடு, வசவு... மூணு தலைமுறையா அனுபவிச்சாச்சு... இப்ப முயற்சி பண்ணினாதான் பிள்ளங்களாவது பிக்கல் பிடுங்கல் இல்லாம சந்தோஷமா இருக்கும்...''

''நம்மால முடியுமா?''ன்னு கணவன் கேட்டதெல்லாம் அவளுக்குக் காதில் விழுந்த மாதிரியே தெரியல...

''நீங்களாவது பெயர் சொல்லிக்கறா மாதிரி ஒரு கம்பெனியில வேலை செய்யறீங்க. எங்க அக்கா வீட்டுக்காரரப் பாருங்க... பெயருக்கு எங்கயோ வேலை செஞ்சுகிட்டு அதைவச்சி லோன் வாங்கி வீடு கட்டிட்டார். இத்தனக்கும் உங்களைவிட சம்பளமும் கம்மி! என்ன.. அவர் முயற்சி பண்ணினார் முடிஞ்ச. நீங்க முயற்சியே பண்ணலைன்னா எப்படி?''

''சரி; பார்க்கலாம்!'' அவர் சொன்ன அவ்வளவுதான். ஆனால் பாக்யலட்சுமியோ இரண்டு வாரத்தில் எல்லா வேலையையும் முடிச்சிட்டாங்க.

இருந்த இடத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தாண்டி ஏரிக்கரை ஓரமா ஒரு டபுள் பெட்ரூம் பிளாட். காத்து, தண்ணீர் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரே பிரச்னை காசுதான். அதiயும் பில்டரே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார். நூறுசதவீதம் லோன்... எப்படி வாங்கறது என்ன செய்யறன்னு ஸ்டெப் பை ஸ்டெப் ஆலோசனை மட்டுமல்ல உதவும் பில்டரே.

கணவரோட சம்பள ரசீது, பேங் ஸ்டேட்மெண்ட், ரேஷன் கார்டு ஜெராக்ஸ்னு சில காகிதங்களை மட்டும் கொடுத்தார். அதன்பின்பு பில்டரும், லோன் தந்த பேங்கோட ஏஜெண்டும் நீட்டிய பேப்பரில் எல்லாம் கணவரை கையெழுத்துப் போட வைத்தார். பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த கணவரை இரண்டே வாரத்தில் எட்டுலட்ச ரூபாய் பிளாட்டுக்கு உரிமயாளராக்கிவிட்டார் பாக்யலட்சுமி...

மாதம் எட்டாயிரம் ரூபாய் தவணைபோக நாலாயிரத்தில் முனகாமல் குடும்பம் நடத்துவேன் என்று மனவி தந்த உத்தரவாதத்தை நம்பி கணவரும் தலையாட்டிவிட்டார். அப்புறமென்ன கணவனும் மனைவியும் ஓஹோவென்று கிரஹப்பிரவேசம்...

தலைமுறைப் பிழையை திருத்திவிட்ட திருப்தி இருவருக்கும்! எல்லாம் இரண்டே மாதங்கள்தான். மூன்றாவது மாதத்திலேயே தவணையைக் கட்ட முடியாத நிலைமை. வெளியில் வட்டிக்கு வாங்கி ஒரு வாரம் கழித்து கட்டப்போக அங்கேயும் அபராத வட்டி. 'இன்னும் இருபது வருடம் எப்படி சமாளிக்கப் போகிறோம்' என்கிற மன அழுத்தம் கொஞ்சமாகத் தலைகாட்ட, இரத்த அழுத்தம் இருபது பாயிண்ட் எகிறியது.

இந்தக் சமயத்தில்தான் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை அரை சதவிகிதத்தில் ஆரம்பித்து அரையரையாக மூன்று சதவிகித உயர்வுக்குக் கொண்டுவர மொத்த சம்பளமும் தவணைக்கு என்றாகிவிட்ட நிலை... கௌரவம், சுதந்திரம் என்று ஆசைப்பட்டு கடைசியில் சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் விக்கி வெலவெலத்துப் போய்விட்டனர் பாக்யலட்சுமியும், அவர் கணவரும்.

நிலமை கையை மீற, கடைசியா வங்கியையே தஞ்சம் அடைந்து தப்பிக்க வழி கேட்டனர். அவர்கள் காட்டிய ஒரே வழி... பின்னால் கட்டவேண்டிய பணத்த மொத்தமாக இப்பொழுதே கட்டினால், சுமையைக் குறைக்கலாம் என்று சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டனர். பழைய மாதத் தவணையிலேயே இருக்க வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு பணத்தை முன்னதாக கட்ட வேண்டும் என்று அவர்கள் போட்டுக் காட்டிய கணக்கெல்லாம் பாக்யலட்சுமியின் மூளைய எட்டவே இல்லை...

அப்புறமென்ன வயிறா மானமா என்ற நிலை வர... வயிறே பிரதானம் என்று சொந்த வீட்டை கைகழுவிவிட்டு வாடகை வீடே போதும் என்று முடிவெடுத்துவிட்டனர். இது இவர்களின் முடிவுமட்டுமல்ல சொந்தவீட்டுக் கனவில் சூடு பட்ட பல நடுத்தரக் குடும்பங்களின் முடிவு.

திடீர் வட்டி உயர்வால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பங்களின் கஷ்டத்தை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அரசும், வங்கிகளும் பணம் கட்ட முடியாதோர் பட்டியல் நீளமாக... ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்... இருபது லட்சத்துக்குக் குறைவாக கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்வது. அதேவேளயில் 20 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும் இரண்டாவது வீடு வாங்கியவர்களுக்கும் வட்டி விகிதத்தை உயர்த்துவது என முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவு சமீபத்தில் சிக்கலில் இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ஆறுதல்தானே தவிர, சக்தியை மீறி கடன்பட்டு நீண்டநெடும் காலமாக வட்டி குட்டி போட்டவர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பளிக்குமோ தெரியாது.. மொத்தத்தில் நோயும், கடனும் ஒன்று.. வராமல் பார்த்துக் கொள்ளவேண்டுமேதவிர, வந்தபின் தடுப்பது சாமான்யர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதே..

அதனால் சொந்தவீடு கனவில் மிதப்பவர்கள் கொஞ்சம் வீட்டுக்கடன் விஷயத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக வட்டி விகிதமோ, வாழ்க்கைச் செலவோ அதிகமானால் நாம் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதில் தெளிவான முடிவு இருக்கவேண்டும். ஏனென்றால் காசு விஷயத்தில் கனவைவிட கணக்குதான் முக்கியம். SOURCE:> INTERNET.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

Post a Comment

Newer Post Home Older Post
Subscribe to: Post Comments (Atom)

Categories

  • A MOVIE
  • dr
  • health
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS
  • ISLAM
  • KAVITHAI
  • new tamil mp3
  • puplic
  • tech
  • இந்தியன் lovers
  • இஸ்லாம்
  • நித்யா

Photostream

bjghtotfnbovtytvobuiygrcvbhijpiutgbgu
M.FROZALI MURARBADU +917373118517

My site is worth$967.28Your website value?

ANY WHERE ANY TIME CONNECTING PEOPLE
frozali. Powered by Blogger.
very cheap calling card india mobile 1200 min land line 1000 min just 75 saudi riyal only contact: +966533693467

Followers

Blog Archive

  • May (2)
  • Jul (7)
  • Mar (48)
  • May (1)
  • Jun (3)
  • Jun (1)
  • Jun (5)
  • Jul (1)
  • Dec (1)
  • Apr (1)

Hello there!

Follow us

Bookmark and Share

Tags

  • A MOVIE (12)
  • dr (1)
  • health (5)
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS (1)
  • ISLAM (9)
  • KAVITHAI (4)
  • new tamil mp3 (2)
  • puplic (1)
  • tech (4)
  • இந்தியன் lovers (1)
  • இஸ்லாம் (1)
  • நித்யா (1)
Copyright © 2013 WELCOME TO MURARBADU - Btemplate by SoraTemplates - and Free Blogger Templates.

Back to top